ஸ்ரீநகர், மே 12-ஜம்மு -காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ஞாயிறன்று நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.சோபியான் நகரில் ஹிந்த்சீதாபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.